Sunday, September 27, 2009

வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி

எழுத விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்


மனிதனில் இருப்பது ஒரே ஒரு பவர். அது செக்ஸ் பவர். அது கீழ் நோக்கி பாய்ந்தால் செக்ஸ். மேல் நோக்கி நகர்ந்தால் யோகம். மனிதனில் இருக்கும் ஒரே சக்தி காம சக்தி என்பதால் அவன் படைத்தே ஆகவேண்டும். படைத்தலுக்கான வழி செக்ஸ் . தீராத‌ செக்ஸ் கோரிக்கைகள் கொண்டவன் அல்ல்து செக்ஸில் ஓரளவு செலவழிந்தும் முழுமையாக செலவழியாத அத்தனை காமசக்தி கொண்டவனுக்கே படைப்பாற்றல் உண்டு. க்ரியேஷன் என்றால் படைப்பு. ரிக்ரியேஷன் என்றால் பொழுது போக்கு. அதை இன்னொரு விதமாகவும் சொல்லலாம் ரீ ‍ க்ரியேஷன். அதாவது படைப்பில் உள்ளதையே சற்றே மாற்றி படைப்பது. மீண்டும் படைப்பது. ஸ்தூலமாக படைத்து காட்டும் அளவுக்கு போதுமான காம சக்தி உள்ளவன் க்ரியேட் செய்கிறான். சாம்ராஜ்ஜியங்களை, அணைகளை . போதுமான சக்தியற்றவன் பேசுபவன்/எழுதுபவன் ஆகிறான்.
காமத்துக்கும் வாய்க்கும் என்ன தொடர்பு ? வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. ஒரே குழாயின் ஆரம்பம் வாய். இறுதி ஆசனம். ஆசனவாயை ஒட்டி இன உறுப்பு அமைந்திருப்படால் வாயில் ஏற்படும் அதிர்வுகள் இன உறுப்பையும் பாதிக்கின்றன. இப்படியாக காரியத்தில் சூரத்துவம் காட்ட முடியாதவன் பேசி தீர்த்துக் கொள்கிறான். எழுத்து என்ப‌தென்ன‌ ? ம‌வுன‌மாக‌ பேசுத‌ல் தானே ! பேச்சை காட்டிலும் இத‌ன் அதிர்வுக‌ள் தான் ஆழ‌மாக‌ இருக்கும்.

"என்ன நக்கலா" என்ற வார்த்தை அதன் விபரீத அர்த்தம் புரியாமல் பெண்களாலும் கூட உபயோகிக்கப் படுகிறது. காமத்தால் தகித்து,நேரடி,உடனடி,உடலுறவுக்கு தவிக்கும் ஆண் அல்லது பெண்ணுக்கு நாக்கால் வடிகால் தர முயல்வது தான் நக்கல் என்ற வார்த்தையின் நேரடி பொருள்.

பேச்சு எழுத்து எல்லாமே ந‌க்க‌ல் வ‌கையை சார்ந்த‌வை. பேச்சும் எழுத்தும் உண‌ர்வுக‌ளை தூண்ட‌ உபயோப்‌ப்ப‌டுமே த‌விர‌ வ‌டிகாலை த‌ராது. (த‌னிப்ப‌ட்ட‌ சோக‌ம் இத்யாதிக்கு வ‌டிகாலாக‌லாம் எழுதுப‌வ‌னுக்கு அ எழுத்தில் த‌ன்னை அடையாள‌ம் காண்ப‌வ‌னுக்கு)

என் மாதிரி ஒன்ற‌ரையணா ப‌திவ‌ர்க‌ள் ம‌ட்டுமே அல்ல‌ எழுத்தாள‌ன் என்று சொல்லிக்கொள்ளும் யாருக்குமே இந்த‌‌ விதி பொருந்தும்


எனவே தான் நாடு இருக்கும் இழி நிலையில் சும்மா நக்கி உணர்வுகளை தூண்டும் பேச்சும் எழுத்தும் தேவையில்லை. ப‌டைத்துக்காட்டும் செய‌ல்வீர‌ர்க‌ள் தேவை. மேற்ப‌டி செய‌ல்வீர‌ர்க‌ளின் உண‌ர்வுக‌ளை தூண்டும் எழுத்துக்க‌ளை ம‌ன்னிக்க‌லாம்.செக்ஸில் fore play மாதிரி. அதை விடுத்து நானும் எழுதுகிறேன் என்று எதையேனும் எழுதி க‌ணிணி திரையையும் , காகித‌த்தையும் கறைப்பட்ட கேர்ஃப்ரீயாக்கிவிடக்கூடாது. கறைப்பட்ட கேர்ஃப்ரீ கூட‌ ஒரு க‌ர்ப‌ம் த‌விர்க்க‌ப்பட்ட‌த‌ற்கு சாட்சியாகிற‌து. இன்ன‌ பிற‌ எழுத்துக்க‌ள் ?



முதலில் இன்றைய நாட்டு நிலையை அறிந்து கொள்ளுங்கள்.

1.சுதந்திரம் வந்து 62 ஆண்டுகள் ஆனாலும் லட்சக்கணக்கான கிராமங்களில் சுத்தமான குடி நீர் இல்லை (நகரங்களில் மட்டுமென்னா வாழுது என்று கேட்டு விடாதீர்கள்/மினரல் வாட்டர் கிடைக்கிறதல்லவா?) கழிவறை வசதியில்லை. சாலை வசதி யில்லை, மேல் சாதியினரின் கொடுமை,தீண்டாமை, சாராயம்,கோழிப்பந்தயம்,சூதாட்டம்,கள்ளக்காதல்கள் தலைவிரித்தாடுகின்றன. போலீஸ்/கோர்ட்டு எல்லாம் பேச முடியாது.

2.நாட்டின் 40 கோடி மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். வறுமை தான் இந்தியாவின் பல பிரச்சினைகளுக்கு காரணம்.

3.நாட்டின் 70 கோடி மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கிறார்கள். உடலை விற்கும் வேசிக்கு கூட தன் ரேட்டை நிர்ணயிக்கும் வாய்ப்பு இருக்கிறது. விவசாயிக்கு தன் விளைபொருளுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமை இல்லை. தினம் தினம் விவசாயிகள் தற்கொலை நடந்த படியே இருக்கிறது. ல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ ஏக்க‌ர் நில‌ம் காய்கிற‌து. இள‌வ‌ரச‌ர்க‌ள் ந‌தி நீர் இணைப்பு சுற்றுச்சூழ‌லை பாதிக்கும் என்று வேத‌ம் ஓதி செல்கின்ற‌ன‌ர். இவ‌ர் தாத்தா க‌ட்டினாரே மெகா அணைக‌ள் அவ‌ற்றாலும் தான் சு.சூ பாதிக்க‌ப்ப‌ட்ட‌து. அதை க‌ட்ட‌ வந்த‌ கூலிக‌ள் த‌ங்கி விட்ட‌தால்தான் மாஃபியாவே ஏற்ப‌ட்ட‌து.


4.நாட்டில் 10 கோடி வேலையற்ற வாலிபர்கள் இருக்கிறார்கள். வேலையில்லாமை காரணத்தால் சுய இன்பம் முதல், எல்லை கடந்த தீவிரவாதம் வரை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள், நாட்டையும் இலக்காக்கி வருகிறார்கள்.

5.ஒருவர் எம்.எல்.ஏ வாக (கட்சி டிக்கட்டில், சாதாரண தொகுதியில்) ஜெயிக்க வேண்டுமானால் 1 கோடி ரூபாய் செலவழித்தாக வேண்டும். 4 எம்.எல்.ஏ. தொகுதி அடங்கியது ஒரு எம்.பி தொகுதி. மொத்தம் எத்தனை எம்.எல்.ஏ, மொத்தம் எத்தனை எம்.பி, கணக்கிட்டு அதை 3 ஆல் பெருக்கிப்பாருங்கள் (கு.ப. மும்முனை போட்டி என்ற கணக்கில்) . இத்தனை பெரிய தொகை ஒரு தேர்தலில் செலவழிக்கப்படுகிறது. இதை திருப்பி எடுக்க அந்த எம்.எல்.ஏ அல்லது எம்.பி செய்யும் தகிடுதத்தங்களுக்கு 10 சதவீதம் லஞ்சம் தர(பெற)ப்படுகிறது. இவர் 10 பைசா லஞ்சம் வாங்கினால் ஒரு ரூபாய் பணியும் நாசமாகிறது.


6.மார்க்கெட்டில் நூற்றுக்கு /ஒரு நாளைக்கு 10 வ‌ட்டி வ‌சூலிக்க‌ப்ப‌டுகிற‌து. ஒருவ‌ர் ச‌ம்பாதிக்க‌ குறைந்த‌து 100 பேர் அவ‌ரை அண்டி,சுர‌ண்டி பிழைக்கிறார்க‌ள்.

இது மாதிரி இன்னும் 94 விஷ‌ய‌ங்க‌ள் கூற‌லாம். எழுத‌ வ‌ருப‌வ‌ர் இதையெல்லாம் ம‌ன‌தில் இருத்தி , த‌ன் எழுத்தை ப‌டிப்ப‌வ‌ர் இந்த‌ அமைப்பை மாற்ற‌ /சீர்திருத்த‌ முன் வ‌ரும் வ‌ண்ண‌ம், வாச‌க‌ரை மோட்டிவேட் செய்யும் வ‌ண்ண‌ம் எழுத‌ வேண்டும். இல்லாவிட்டால் பேசாம‌ல் ச‌ல‌வை க‌ண‌க்கு ம‌ட்டும் எழுதி கொள்வ‌து ந‌ல‌ம்.

No comments:

Post a Comment